சாய்ந்த அறிவிப்பு பலகை

Update: 2022-08-03 13:35 GMT


கும்பகோணம் காமராஜர் சாலை தனியார் பள்ளி அருகில் உள்ள அறிவிப்பு பலகை சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த பலகை முறையான அமைப்பில் இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு அருகில் பள்ளி இருப்பது தெரியவில்லை. இதன் காரணமாக வாகனங்கள் அதி வேகமாக செல்கின்றன. இதனால் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த அறிவிப்பு பலகையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,கும்பகோணம்

மேலும் செய்திகள்