இருசக்கர வாகனங்களால் இடையூறு

Update: 2022-07-30 13:13 GMT

திருப்போரூர் பேரூராட்சி பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கான இடம் உள்ளது. பெரும்பாலானோர் அங்கு நிறுத்தி, 'டோக்கன்' பெற்று செல்கின்றனர்.ஆனால், சிலர் பஸ் நுழைவு வாயில் முகப்பிலும், நடைபாதை ஓரத்திலும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இவர்களின் செயல், பொதுமக்களுக்கும், பஸ் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து, இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்