சென்னை திருவல்லிகேணி பெரிய தெரு மசூதி அருகே தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் அதிகமான நாய்கள் வருவோர் போவோர்களை துரத்துவதும், குரைப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியை கடந்து செல்லவே அச்சமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.