குண்டும் குழியுமான சாலை

Update: 2022-07-27 14:29 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஓரத்தியில் இருந்து தோல்பேடு செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவ்வழியாக அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்பட வாகனங்கள் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சி தருவதால் தண்ணீர் எளிதில் தேங்கி விடுகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த பள்ளத்தை சீர் செய்து, சாலையை மேம்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்