காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே முருகன் தெருவில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால் பலவித நோய்கள் உண்டாக வழிவகுக்கின்றது. தினமும் கொட்டப்படும் குப்பைகளால் அந்த பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. எனவே குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?