சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகர் 6-வது பிரதான சாலையில் கடந்த ஆறு மாதங்களாக மழைநீர் வடிகால் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் சாலைகள் தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலை பணி விரைவில் முடிக்கப்பட்டு சீரான போக்குவரத்துக்கு வழி வகுக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.