செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் கலையரங்கம் இல்லாததால் பள்ளி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளி வளாகத்தில் கலையரங்கம் அமைத்து தர வேண்டும் என்று பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.