குரங்குகள் அட்டகாசம்

Update: 2022-07-25 16:20 GMT


தஞ்சை நகரில் ஒரு சில இடங்களில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.குறிப்பாக எம்.கே. மூப்பனார் சாலை, தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ்நகர், சோழன் நகர் போன்ற இடங்களில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்குள் மாடி வழியாக உள்ளேன் சென்று பொருட்களை தூக்கி சென்று விடுகின்றன. மேலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்-சிறுமிகளை கடித்து விடுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரபேஷ்,ராஜீவ்நகர்

மேலும் செய்திகள்