மது பிரியர்கள் அட்டகாசம்

Update: 2023-09-17 11:35 GMT


மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர்-சோழம்பேட்டை இணைப்பு காவிரி ஆறு பாலம் மற்றும் மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையார் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்திலும் மது பிரியர்கள் இரவு நேரத்தில் மதுவை குடித்துவிட்டு காலிபாட்டில்களை உடைத்து விட்டு செல்கிறார்கள். இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி மைதானத்தில் மது அருந்துவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்