மயிலாடுதுறையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது செயல்படாமல் காட்சி பொருளாக இருப்பதால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து சிக்னல் செயல் பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள், மயிலாடுதுறை