மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு, பட்டமங்களம் போன்ற பகுதியில் இரவு நேரங்களில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன.இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை