செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் ரேஷன் கடையில் கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடாக உள்ளது. கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் எப்போது கேட்டாலும் இல்லை என்று தான் பதில் கூறுகிறார்கள். ரேஷன் கடையில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தங்கு தடையின்றி பொருள் கிடைக்க வழி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.