செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் வெடால்காலனியில் ஆரம்ப சுகாதாரம் இல்லை. இதனால் கொரோனா பெருந்தொற்று காலங்களில் மருத்துவ வசதிக்காக இப்பகுதி மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் சூழல் அமைந்தது. மேலும் தற்போது மழை காலம் என்பதால் மலேரியா, பெரிய அம்மை போன்ற நோய் பரவி வருவதால் எங்கள் பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே ஆரம்ப சுகாதாரம் அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.