கூட்டமாக வரும் பன்றிகள்

Update: 2022-07-23 14:40 GMT

சென்னை திரு.வி.க. நகர் மூலக்கடை மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் நிறூவனம் அருகே மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் போடப்படும் குப்பைகளில் உள்ள கழிவுகளை உண்பதற்காக தினமும் நூற்றுக்கணக்கான பன்றிகள் அங்கு கூடி வருகின்றன. இவ்வாறு கூடும் பன்றிகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மேலும் சாலையை கடக்கும் பன்றிகளால் அவ்வப்போது விபத்துகளும் நடைபெற்று வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்