சென்னை அடையாறு, இந்திரா நகர் ரங்கநாதபுரம் 20-வது குறுக்கு தெருவில் கடந்த 10 நாட்களாக சாலையில் கழிவு நீர் தேங்கி கிடந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சீரமைத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.