அறிவிப்பு இன்றி மின்வெட்டு

Update: 2023-06-07 14:31 GMT


நாகை மாவட்டம் காடம்பாடி, வெளிப்பாளையம் போன்ற பகுதிகளில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. தற்போது நிலவும் கோடை வெப்பத்தால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவில் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் வெட்டு ஏற்படும் நாளை முன்பே தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்