செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மீன் மார்க்கெட் எதிரே பொதுமக்கள் ஜி.எஸ்.டி. சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து அப்பகுதியில் சுரங்கப்பாதை அல்லது உயர் மட்ட நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.