செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் சமத்துவ சாலையில் அமைந்த முத்துமாரி அம்மன் கோவில் அருகில் உள்ள குளம் ஆகாயத் தாமரைப் படர்ந்து காணப்படுகிறது. இதனால் குளத்தில் அதிக அளவில் தண்ணீா் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.