செங்கல்பட்டு மாவட்டவம் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே ஜி.எஸ்.டி. சாலையை பொதுமக்கள் கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே பொதுமக்கள் சாலையை கடந்து செல்வதற்கு நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை பொதுமக்கள் விடுத்துள்ளனர்.