பன்றிகள் தொல்லை

Update: 2023-05-24 11:37 GMT


நாகை மாவட்டம் புத்தூரில் சிவன் கீழ வீதி, சிவன் மேலவீதி, சிவன் தெற்கு வீதி, தாமரைகுளம் கீழ்கரை, வடகரை, வேளார் தெரு, நாடார் தெரு ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் செடி. கொடிகளை சேதப்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்