செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை கோவில் குளத்தை ஒட்டி, ஓ.எம்.ஆர். சாலை ஓரத்தில் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டு இருந்தும் அதை பயன்படுத்துவதில்லை.. எனவே, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.