சென்னை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 61-வது தெருவில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மின்சார பெட்டி குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்வாரிய அதிகாரிகளின் உடனடிய நடவடிக்கையால் புதிதாக மின்சார பெட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்ததோடு, நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், துணைநின்ற 'தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.