குடிநீர் குழாய் சேதம்

Update: 2023-04-12 15:27 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய சாலையான வண்டலூர் வாலாஜாபாத் 6 வழி சாலை உள்ளது. இந்த சாலையில் கரசங்கால், படப்பை அருகே உள்ள பாலாற்று குடிநீர் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீனாக வெளியேறுகிறது. கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே, குடிநீர் குழாயை சீரமைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.


 

மேலும் செய்திகள்