சென்னை வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரை பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. இதனால் ரெயில் நிலையத்துக்கு வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பூட்டி கிடக்கும் கழிப்பறைகளை பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரெயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.