சென்னை எண்ணூர் எஸ்.வி.எம். நகரில் ஆபத்தான நிலையில் மின்சார கேபிள் வேளியே போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்லும் குழந்தைகள், பாதசாரிகள் அனைவரும் அச்சப்படுகின்றனர். மேலும் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மின்சார துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து மின் சார கேபிளை சரி செய்ய வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.