செங்கல்பட்டு மாவட்டம், கௌரி வாக்கம் அண்ணா தெருவில் உள்ள மின் கம்பம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியினர் நடந்து செல்லும் போது அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட மின்சார துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைக்க வழி செய்ய வேண்டும்.