பழுதடைந்த பள்ளி கட்டிடம்

Update: 2023-03-26 13:02 GMT

சென்னை புளியாந்தோப்பு, மன்னார் சாமி தெருவில் உள்ள உருது நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி கட்டிடம் பழுதடைந்து சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து காணப்படுகிறது. மேலும் மழை காலங்களில் மழைநீர் வகுப்பறையில் தேங்குகிறது. இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்