பஸ் நிலையம் ஆக்கிரமிப்பு

Update: 2023-03-26 12:51 GMT

செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் ஊராட்சி மதனபுரம் புற்றுகோவில் அருகே உள்ள பஸ் நிறுத்ததில் பிச்சைகாரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பயணிகள் அமரும் இடத்தில் பிச்சைக்காரர்கள் தங்கள் உடமைகளை வைத்துள்ளார்கள். இதனால் பயணிகள் இருக்கையில் அமராமல், சாலையில் வந்து நிற்கிறார்கள். மேலும் பஸ் நிறுத்தத்தில் உள்ள இருக்கைகளில் அமர சென்றால் மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். பிச்சைக்காரர்களிடமிருந்து பஸ் நிறுத்தத்தை மீட்டு தர வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கை.

மேலும் செய்திகள்