சென்னை பாலவாக்கம், காமராஜர் சாலை குடிநீர் குழாய்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடாமல் பள்ளமாக உள்ளது. பள்ளி அருகே இருப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.மேலும் பாதசாரிகள் தவறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.