பராமரிப்பின்றி காணப்படும் பஸ் நிறுத்தம்

Update: 2023-03-22 12:55 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சி நந்திவரம் பஸ் நிறுத்தம் முறையான பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. குறிப்பாக பஸ் நிறுத்தத்தில் உள்ள கட்டிடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது.மேலும், பஸ் நிறுத்தத்தில் முறையான வசதிகள் இல்லை. இதனால் பஸ் நிறுத்தத்தை பயணிகள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தை சீரமைத்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்