சுகாதார நிலையம் முழுநேரமும் செயல்படுமா?

Update: 2023-03-22 12:50 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சிலப்பதிகாரம் தெருவில் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சுகாதார மையம் பகுதிநேரம் மட்டுமே செயல்பாடுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு சுகாதார நிலையத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் செயல்பட வழி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்