செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ரெயில்வே கேட்டிலிருந்து ஆதனூர் செல்லும் சாலையில் இருப்புறமும் ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து சாலை ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை மீட்டு தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.