கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-03-22 11:59 GMT


வேளாங்கண்ணி மற்றும் அதனை சுற்றி பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வேளாங்கண்ணி

மேலும் செய்திகள்