செங்கல்பட்டு மாவட்டம், விளாங்காடு கிராமத்தில் பழுதடைந்த நீர்தேக்க தொட்டி இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்ல சிரமமாக உள்ளது. மேலும் குழந்தைகள் விளையாடும் போது தடுக்கி விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நீர்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.