செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் 7-வது வார்டு பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியே சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.