கழிவுநீர் கால்வாய் வேண்டும்

Update: 2023-03-12 12:49 GMT

செங்கல்பட்டு மாவட்டடம் தாம்பரம் பெருங்களத்தூர் 57-வது வார்டு பெரியார் தெருவில் முறையான கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. மேலும் கொசு தொல்லை உற்பத்தியாகி நோய் தொற்றும் பரவுகிறது. அப்பகுதியினர் தெருக்களில் நடக்க முடியாமல் மூக்கை பொத்திக்கொண்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்