நாய்கள் தொல்லை

Update: 2023-03-08 13:49 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் அரங்கநாதன் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் தெருக்களில் செல்ல முடியாமல் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்