பழுதடைந்த மின் கம்பம்

Update: 2023-03-08 13:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், விரிசல் அடைந்தும் கம்பிகள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அந்த பகுதியை கடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின் கம்பத்தை மாற்ற மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்