சென்னை மணலி, சின்னக்கோடு முனுசாமி தெருவில் சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் அமைக்க தெரு முழுதும் பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.