செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் 7-வது வார்டு பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு உள்ளன. இதனால் இந்த பகுதியில் தூர்நாற்றம் வீவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை அகற்றி குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.