சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் காந்தி இர்வின் சாலை சேதமடைந்து குண்டும்,குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் நிறுத்தம் இருப்பதால் பஸ்சில் இருந்து இறங்கும் பயணிகள் மற்றும் முதியவர்கள் பள்ளங்களில் தவறி விழந்து விபத்தும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.