செங்கல்பட்டு மாவட்டம், வாலஜாபாத் மண்ணிவாக்கம் கூட்ரோட்டில் போக்குவரத்து சிக்னல் இல்லை. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மேலும் பாதசாரிகள் சாலையை கடப்பதில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கிறார்கள். எனவே போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.