செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சிவசங்கர் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.