சென்னை கொளத்தூர் 66-வது வார்டு ஜெயராமன் நகரில் குப்பைகள் தேங்கி அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் தூர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.