பஸ் வசதி வேண்டும்

Update: 2023-02-22 13:58 GMT


நாகையிலிருந்து திருவாரூர் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. திருவாரூரில் உள்ள திரு. வி. க. அரசு கலை கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் . ஒரே ஒரு அரசு மகளிர் பஸ் மட்டுமே வந்து செல்கிறது.அதுவும் சில சமயங்களில் வருவதில்லை. இதனால் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசில் அதிகமாகிறது.மேலும் பாதுகாப்பற்ற நிலையில் மாணவர்கள் பயணம் செய்கிறார்கள் . மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் விட வேண்டும்.

மாணவர்கள், நாகை

மேலும் செய்திகள்