சென்னை குமணன்சாவடி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள்பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் மழை மற்றும் வெயில் காலங்களில் நிற்பதற்கு கூட சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.