செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியிலுள்ள வி.ஜி.பி. பஸ் நிறுத்தம் முதல் ராஜ கீழ்பாக்கம் சிக்னல் வரை சாலையின் இருபுறமும் கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து இடையூறாக உள்ளது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டும்.