செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பஸ் நிறுத்தத்தில் குமணச்சாவடிக்கு செல்லும் பஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் காலையில் வேலைக்கு செல்லும் பயணிகள் எந்த பஸ் முதலில் செல்லும் என்பது தெரியாமல் குழப்பமடைகின்றனர். எந்த பஸ் முதலில் செல்லும் என்பது பற்றி பலகை வைத்தால் பொதுமக்கள் சிரமப்படும் சூழலை தவிர்க்கலாம்.