தீர்வு கிடைக்குமா?

Update: 2023-01-25 14:43 GMT

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உத்திரமேரூர் வழியாக வந்தவாசி, விழுப்புரம் செல்லும் அரசு பஸ்கள் தென்னாங்கூர் பகுதியில் நிற்பதில்லை. அங்கு பிரசித்தி பெற்ற பாண்டு ரங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த கோவிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அரசு பஸ்கள் மேற்கூறிய பகுதியில் நிற்காததால், கோவிலுக்கு வரும் மக்கள் வந்தவாசியில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் தென்னாங்கூர் திரும்பி செல்லும் சூழல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்