பயணிகள் கோரிக்கை

Update: 2023-01-25 13:55 GMT

சென்னை, மணலி புதுநகர் - பாரிமுனை இடையே (வழித்தடம் - 56 J) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வழித்தடத்தில் குறைவான எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் பஸ்களுக்காக நீண்டநேரம் காத்திருக்கும் நிலை இருக்கிறது. எனவே அதிகமான பஸ்களை இந்த வழித்தடத்தில் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல 56J,28A மற்றும் 56P எண்ணில் பஸ்களை அதிகரித்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் செய்திகள்